May 13, 2024

தென்காசி சரித்திரம்(22)-ஓவியர்.கொண்டல்ராஜ் ஓவியங்களின் வரலாறு-பதிவு-(3)-13-05-2024

 

தென்காசி சரித்திரம்(22)-ஓவியர்.கொண்டல்ராஜ் ஓவியங்களின் வரலாறு-பதிவு-(3)-13-05-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

திரு.கொண்டல்ராஜ்,

ஓவியர், கடையநல்லூர்

அவர்கள்

தான் வரைந்

ஓவியங்களை

எவ்வாறு வரைந்தார்

என்பதையும்,

எதற்காக வரைந்தார்

என்பதையும்,

எப்படி வரைந்தார்

என்பதையும்,

நமக்காக

விளக்குகிறார்.

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----13-05-2024

-----திங்கட் கிழமை

///////////////////////////////////////////////




 

 

 

May 07, 2024

தென்காசி சரித்திரம்(19)-உலக கலை பொக்கிஷங்களின் பாதுகாவலர் ஓவியர்.கொண்டல்ராஜ்-07-05-2024

 

தென்காசி சரித்திரம்(19)-உலக கலை பொக்கிஷங்களின் பாதுகாவலர் ஓவியர்.கொண்டல்ராஜ்-07-05-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

உலக நாட்டில்

உள்ள எந்த ஒரு

கலைப்படைப்பாக

இருந்தாலும்,

அந்த படைப்பு

அந்த நாட்டின்

கலை,பண்பாடு,

கலாச்சாரத்தை

பறைசாற்றும்

வகையில் இருக்கும்

 

திரு.கொண்டல்ராஜ்,

ஓவியர், கடையநல்லூர்

அவர்கள் சேகரித்து

வைத்துள்ள

கலைப்பொக்கிஷங்களைப்

பார்த்து

அந்த அந்த நாட்டின்

கலை, பண்பாடு,

கலாச்சாரத்தைத்

தெரிந்து கொள்வோம்.

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----07-05-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////



 

May 05, 2024

ஜபம்-பதிவு-972 மரணமற்ற அஸ்வத்தாமன்-104 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-972

மரணமற்ற அஸ்வத்தாமன்-104

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


ஆரம்பத்தில் சிறிது சிறதாக பந்தயப் பொருளை வைத்தவன், போகப்போக பந்தயப் பொருள்களை பெரிதாக வைத்தான். நாட்டை வைத்தான், நகரத்தை வைத்தான், தடைசியில் தன்னை வைத்தான், தன் தம்பிகளை வைத்தான், தன் மனைவியை வைத்தான்.


இப்போது அவனிடம் ஒன்றும் இல்லை. தர்மன், அவன் தம்பிகள், அவனுடைய மனைவி பாஞ்சாலி ஆகிய அனைவரும் கௌரவர்களுக்கு அடிமையாகி விட்டார்கள். 


துரியோதனனுடைய அடிமையாகி விட்டார்கள். 

தர்மனால் அவனுக்கு அவமானம், அவன் தம்பிகளுக்கு அவமானம், அவர்கள் மனைவிக்கு அவமானம். சூதாடினால் குடும்பம் கஷ்டப்படும், அனைத்தையும் இழக்க நேரிடும், மானம் போய் விடும், மரியாதை போய் விடும், குடும்பம் தெருவுக்கு வந்துவிடும், குடும்பம் அவமானப்பட நேரிடும், அசிங்கப்பட நேரிடும், ஏளனப்பட நேரிடும் என்பது தர்மன் சூதாடி இந்த உலகத்திற்கு நிரூபித்து விட்டான்.


தர்மனுடைய இந்த செயலைப் பார்த்தாவது தர்மனுடைய வரலாற்றைப் படித்தாவது வருங்கால தலைமுறைகள் சூதாடினால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


 சூதாடக்கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும். சூதாடிகள் சூதாடாமல் இருந்தால் தான் குடும்பத்திற்கு நல்லது அனைத்திற்கும் நல்லது என்பதை உணர வேண்டும். 


தர்மனை ஒரு முன் உதாரமாணமாகக் கொண்டு சூதாடிகள் சூதாடுவதை நிறுத்த வேண்டும். 


ஒரு சூதாடி சூதாடினால் எப்படி இருப்பான் என்பதற்கு வரலாற்றில் தர்மன் ஒரு உதாரணமாகி விட்டான். 

நாளைய வரலாறு சூதாடிகளுக்கு தர்மன் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கட்டும்

அடிமைகளாக இருக்கும் பாண்டவர்கள் மீது அதிக அக்கறை கொண்டு அந்த அடிமைகளின் சார்பாக பேசினீர்கள். தர்மன் என்ற சூதாடியை பெருமையாக பேசினீர்கள்.


 பாஞ்சாலியை பெண்களுக்குள் உயர்ந்தவள் என்று பேசினீர்கள். இதற்கு மேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது ஒன்றும் இல்லை. இதற்குப் பிறகு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அந்த முடிவை எடுங்கள். 


அந்த முடிவையாவது நீதி தவறாமல், நியாயம் தவறாமல், பாண்டவர்கள் மேல் உள்ள அன்பால் அவர்களுக்கு சாதமான முடிவை எடுக்காமல், பாண்டவர்களைச் சார்ந்து ஒரு சார்பாக முடிவு எடுக்காமல் துரியோதனனை எதிரியாகப் பார்க்காமல், அவனுக்கு எதிராக முடிவு எடுக்காமல், உண்மையாக எடுங்கள், நேர்மையாக எடுங்கள், நியாயமாக நடந்து கொள்ளுங்கள், வருங்காலம் உங்களை தவறாக சொல்லும் படி வைத்துக் கொள்ளாதீர்கள்.


(அஸ்தினாபுரத்தின் அவையில் பாஞ்சாலியின் மேலாடை கழட்ட முயற்சி நடந்த செயலுக்குப் பிறகு அனைவருடைய வாக்கு வாதங்களும் முடிந்து விட்டது.


பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும், தங்கள் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஏதாவது ஒரு நகரில் மக்களோடு மக்களாக 1 வருட காலம் வாழ வேண்டும். 


மறைந்து வாழும் போது கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும், தங்கள் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஏதாவது ஒரு நகரில் மக்களோடு மக்களாக 1 வருட காலம் வாழ வேண்டும். 


மறைந்து வாழும் போது கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவர்களுடைய ராஜ்ஜியம் அவர்களுடையது என்பதை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு வனவாசம் புறப்பட்டனர்.)


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

////////////////////////////////

ஜபம்-பதிவு-971 மரணமற்ற அஸ்வத்தாமன்-103 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-971

மரணமற்ற அஸ்வத்தாமன்-103

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)



தர்மன் என்ற பெயர் யுதிஷ்டிரன் தானம், தர்மம் செய்ததினால்

வந்த பெயரும் கிடையாது.

தர்மத்தின் வழியில் நடந்ததால் 

யுதிஷ்டிரனுக்கு தர்மன் என்ற பெயர் வரவுமில்லை.


குந்தி எமதர்மனுடன் சேர்ந்து யுதிஷ்டிரனைப் பெற்றாள். யுதிஷ்டிரன் எமதர்மனுடைய மகன்.

யுதிஷ்டிரன் எமதர்மனுடைய மகன் என்பதில் உள்ள எம என்ற சொல் மறைந்து தர்மன் என்பது மட்டுமே நிலை பெற்று யுதிஷ்டிரனைக் குறிக்க தர்மன் என்ற சொல் வந்துவிட்டது.


தர்மன் என்ற சொல் யுதிஷ்டிரன் எமதர்மன் மகன் என்பதைக் குறிப்பதாகும். யுதிஷ்டிரன் தர்மம் செய்ததால் இந்த பெயர் யுதிஷ்டிரனுக்கு கிடைக்கவில்லை.   


பீஷ்மர் : தர்மனை சூது செய்து சூதாட்டத்தில் தோற்கடித்து விட்டார்கள்.


அஸ்வத்தாமன் : சூது செய்து யாரும் தர்மனைத் தோற்கடிக்கவில்லை. 


சூதாட வேண்டும் என்று யாரும் அவனை கட்டாயப்படுத்தவில்லை. அவனே விருப்பப்பட்டு தான் வந்தான். அவனே விருப்பத்துடன் தான் விளையாடினான். 


ஏனென்றால், சூதாட்டத்தில் விருப்பம் கொண்டவன் தர்மன். அதுவும் தர்மன் மிகச்சிறந்த சூதாடி.

சூதாடிகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட குணம் ஒன்று உண்டு. சூதாட்டம் ஆடத் தொடங்கிய பிறகு அதிலிருந்து எழுந்திருக்கவே அவர்களுக்கு மனம் வராது. 

அதிலும் எதையாவது இழந்து விட்டாலோ, விட்டதை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வெறி கொண்டு தொடர்ந்து சூதாடுவார்கள். அதனால் மேலும் மேலும் தங்களிடம் உள்ளதை இழந்து கொண்டே தான் இருப்பார்கள். 


அந்த மாதிரி சமயங்களில் அவர்களுடைய சுயபுத்தி என்பது வேலை செய்யவே செய்யாது.இதற்கு மேல் ஆட வேண்டாம் என்று பணிந்து கேட்டுக் 

கொண்டாலும், இதற்கு மேல் ஆட வேண்டாம் என்று வலியுறுத்தி சொன்னாலும், சூதாட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எடுத்துச் சொன்னாலும், தயவு செய்து ஆட வேண்டாம் என்று அறிவுரை சொன்னாலும், சூதாடிகள் அவர்கள் பேச்சைக் கேட்கவே மாட்டார்கள். 

வீடு, குடும்பம், வேலை, நண்பர்கள், உறவினர்கள், படித்த படிப்பு, எந்த ஒன்றும் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. 


சாதாரணமான ஒன்றாகத் தான் தெரியும். 

சூதாட்டத்தில் தோற்று அனைத்தையும் இழந்தால் குடும்பத்தின் மானம் போய் விடும், தனக்குள்ள மரியாதை கெட்டு விடும், குடும்பம் தாளமுடியாத கஷ்ட நிலைக்குத் தள்ளப்படும், மீளவே முடியாத பழிக்கு தன்னை ஆளாக்கி விடும் என்பதை மனதில் கொள்ளாமல், இதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் தான் சூதாடிகள் சூதாடுவார்கள்.


சூதாடிகள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்ததால் அழிந்த குடும்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. சூதாடிகள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்ததால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. சூதாடிகள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்ததால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. 

சாதாரண மனிதர்களாக இருந்தால் தங்களிடம் இருப்பதை சூதாட்டத்தில் இழந்ததுமே எழுந்து சென்று விடுவார்கள். 


ஆனால், இவர்களைப் போன்ற பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்கள் இவர்களைப் போன்ற மன்னர்களோ ஒருவரை ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே கடைசி வரை விடாமல் எவ்வளவு தான் இழந்தாலும் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பார்கள். 


அதனால் அவர்களிடம் அமைதி, பொறுமை, நிதானம், சிந்திக்கும் தன்மை, அறிவு என்பது சுத்தமாக இருக்கவே இருக்காது. 

அரசகுலத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக போர்க்கலைகள் மீது தான் அதிக அளவில் ஆர்வம் இருக்கும். ஆனால், தர்மனுக்கு அப்படி அல்ல சூதாட்டத்தின் மீது தான் அவனுக்கு ஆர்வம் அதிகம். தர்மன் சூதாட்டத்தில் ஆர்வம் உள்ளவன் என்பது இந்த உலகத்திற்கே தெரியும்.


தர்மனுக்கு சின்ன வயதில் இருந்து அவனுக்கு கங்கன் என்ற பெயர் உண்டு. கங்கன் என்றால் சூதாடி என்று பொருள். தர்மன் நன்றாக சூதாடுவான் என்ற காரணத்தினால் தான் தர்மன் தம்பிகள் அவனை சூதாட விட்டனர். 


தர்மன் நன்றாக சூதாடுவான், சூதாட்டத்தில் வல்லவன், சிறிய வயது முதல் சூதாடி பழக்கப்பட்டவன், சூதாட்டம் என்று வந்து விட்டால் எதையும் நினைக்க மாட்டான், சூதாட்டத்தில் திறமைசாலியாக இருக்கிறான், சூதாட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற காரணத்தினால் தான் தர்மன் தம்பிகள் தர்மனை சூதாட அனுமதி அளித்தனர்.


துரியோதனன் தன் மாமா சகுனி ஆடுவார் என்று சொன்னபோது கூட, தர்மன் தன்னுடைய மாமா கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லவில்லை. சூதாட்டத்தில் தன் மேல் உள்ள நம்பிக்கையால், சூதாட்டத்தில் தன்னை விட திறமைசாலி யாரும் இல்லை என்ற காரணத்தினால், சூதாட்டத்தில் தன்னை விட யாரும் சிறப்பாக சூதாட முடியாது என்ற நம்பிக்கையால், சூதாட்டத்தில் தன்னை வெல்ல யாரும் கிடையாது என்ற நம்பிக்கையால் தர்மன் நானே சூதாடுகிறேன் என்று சூதாடினான்.


சூதாட்டம் தொடங்கும் போது தர்மனின் சூதாடும் திறமையைக் கண்டு சந்தோஷப்பட்ட பாண்டவர்கள் தர்மன் தோற்க தோற்க பயந்தார்கள். 


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-970 மரணமற்ற அஸ்வத்தாமன்-102 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-970

மரணமற்ற அஸ்வத்தாமன்-102

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


துரியோதனன் பாஞ்சாலிக்கு எத்தகைய கெடுதலைச் செய்தாலும், எத்தகைய கொடுமைகளைச் செய்தாலும், அந்த கொடுமையான செயலை எங்களால் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், அந்த கிருஷ்ண பரமாத்மாவே பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்றினார்.     


அஸ்வத்தாமன் : பாஞ்சாலியின் மானத்தை கிருஷ்ணன் காப்பாற்றியதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.


விதுரர் : எதையுமே வேறுபட்ட பார்வையில் பார்க்கிறாயே கிருஷ்ணன் பாஞ்சாலியைக் காப்பாற்றியதில் அப்படி என்ன அர்த்தம் இருக்கிறது.


அஸ்வத்தாமன் : ராஜசுய யாகத்திற்கு துரியோதனன் இந்திரபிரஸ்தம் வந்த போது அரண்மனையில் உள்ள ஒரு இடத்தில் கடினமாக தரை என்று நினைத்து சலனமற்ற தண்ணீர் தடாகத்தில் காலடி வைத்து நிலை தடுமாறி விழுந்தான். 


அப்போது இந்த காட்சியைக் கண்ட பாஞ்சாலி சிரித்து விட்டாள். சிரித்ததோடு நிற்காமல் குருடன் மகன் குருடன் என்றாள். ஒரு நாட்டின் மன்னனாக இருக்கும் துரியோதனனை அவமானப்படுத்தினாள். 


இந்த நிகழ்ச்சியால் துரியோதனன் மிகுந்த மன வேதனைக்கு உள்ளானான். இது அவள் செய்த பாவம். 

பாஞ்சாலி அன்று துரியோதனனை பார்த்து சிரித்து பாவத்தை செய்த காரணத்தினால், அஸ்தினாபுரத்தின் அவையில் பலபேர்கள் கூடியிருக்கும் அவையில் பாஞ்சாலி இழுத்து வரப்பட்டு பாஞ்சாலியின் மேலாடை அவிழ்க்க முயற்சி செய்யப்பட்டது. 


பாவத்தின் பலனை அவள் சரியாக அனுபவித்து விட்டாள்.

ஒரு சமயத்தில் இக்கட்டான சூழ்நிலையில் பாஞ்சாலி கிருஷ்ணனுக்கு உடை கொடுத்து அவன் மானத்தைக் காப்பாற்றி புண்ணியம் செய்த காரணத்தினால், பாஞ்சாலியின் மேலாடை அவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்ற போது கிருஷ்ணன் பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்ற ஆடை கொடுத்து காப்பாற்றினான். 


பாஞ்சாலி செய்த புண்ணியத்தின் விளைவு அவளுடைய மானத்தைக் காப்பாற்றியது.


உயர்ந்தவராக இருந்தாலும், தாழ்ந்தவராக இருந்தாலும், 


ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும்,


படித்தவனாக இருந்தாலும், படிக்காதவனாக இருந்தாலும்,


இந்த உலகத்தில் யாராக இருந்தாலும்,

புண்ணியம் செய்தால் புண்ணியத்திற்குரிய பலன் உண்டு

பாவம்செய்தால் பாவத்திற்குரிய பலன் உண்டு

என்பதை பாஞ்சாலியின் மேலாடை அவிழ்க்கப்பட்ட செயலில் 

இருந்து தெரிந்து கொள்ளலாம்.


துச்சாதனன் பாஞ்சாலியின் மேலாடையை அவிழ்க்க முயற்சி செய்தது, பாஞ்சாலி துரியோதனனுக்கு செய்த பாவத்தின் பலன் விளைவாக வந்தது.


கிருஷ்ணன் பாஞ்சாலிக்கு ஆடை தந்து காப்பாற்றியது அவள் கிருஷ்ணனுக்கு செய்த புண்ணியத்தின் பலன் கிருஷ்ணன் மூலமாக வந்தது.


பீஷ்மர் : பாஞ்சாலிக்கு மட்டுமல்ல, தர்மனுக்கு நடந்த அவலத்தையும் கண்டு மனம் வருந்துகிறேன். 


அனைவருக்கும் அள்ளி அள்ளி கொடுத்தவன், 

வாரி வழங்கும் வள்ளலாக இருந்தவன். 

இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கியவன்,

தர்மத்தின் காவலனாக இருந்தவன். 

அவனிடமிருந்தே அனைத்தையும் பிடுங்கி விட்டார்கள் 

தர்மம் தலை கவிழ்ந்து இருக்கிறது


தர்மத்தை தலை கவிழ வைத்து விட்டார்கள்.

தர்மமாக வாழும் தர்மருக்கே இந்த நிலை ஏற்பட்டு விட்டது


கிருபர் : தர்மனுக்கு நேர்ந்த அவலத்தைக் கண்டு நானும் மனம் வருந்துகிறேன். 


துரோணர் : தர்மனுக்கு நடந்த செயல். இனி இந்த உலகத்தில் யாருக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


அஸ்வத்தாமன் : யுதிஷ்டிரனுக்கு தர்மன் என்ற பெயர், யுதிஷ்டிரன் தர்மம் செய்த காரணத்தினால் வந்தது இல்லை. 

யுதிஷ்டிரனுக்கு தர்மம் என்றால் என்ன என்று தெரியுமா?


யுதிஷ்டிரனுக்கு தர்மத்தின் அர்த்தம் தெரியுமா?


யுதிஷ்டிரன் யாருக்காவது தர்மம் செய்து இருக்கிறாரா?  

யுதிஷ்டிரன் தர்மம் செய்தார் என்பதற்கு எந்த ஒரு சாட்சியாவது உண்டா?


யுதிஷ்டிரன் எனக்கு தர்மம் செய்தார் என்று யாராவது கூறியிருக்கிறார்களா? 

தர்மம் என்றாலும் கொடையாளி என்றாலும் 

இந்த உலகத்தில் ஒரே ஒருவனைத் தான் குறிக்கும் 

அது கர்ணனைத் தான் குறிக்கும். 


கர்ணன் தான் தர்மத்தில் உயர்ந்தவன்.

கர்ணன் தான் தர்மத்தில் சிறந்தவன்.

கர்ணன் தான் தர்மத்தின் தலைவன். 

கர்ணன் தான் தர்மத்திற்கு எடுத்துக்காட்டு.

கர்ணன் தான் தர்மத்தின் பிதாமகன். 

கர்ணன் தான் தர்மத்தின் காவலன். 



-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-969 மரணமற்ற அஸ்வத்தாமன்-101 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-969

மரணமற்ற அஸ்வத்தாமன்-101

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


நண்பன் மேல் அவப்பெயர் விழக்கூடாது என்பதற்காகப் பேசினேன். 

நல்லவன் ஒருவன் கெட்ட பெயர் 

வாங்கி விடக்கூடாது என்பதற்காகப் பேசினேன். 

உண்மையைப் பேசினேன். அதுவும் உரக்கப் பேசினேன். 


உண்மையைப் பேசுவதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 

பொய்யைப் பேசுவதற்குத் தான் பயப்பட வேண்டும். 


நண்பன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது 

பார்த்துக் கொண்டிருந்தால் நான் நண்பன் கிடையாது. 

அதனால் பேசினேன். 


நான் பெயர் பெற வேண்டும் என்பதற்காகவோ, 

புகழ் பெற வேண்டும் என்பதற்காகவோ, 

பதவி பெற வேண்டும் என்பதற்காகவோ பேசவில்லை.


தவறானதை தவறு என்றேன். 

சரியானதை சரியானது என்றேன்.


தவறு செய்தவர்களை தவறு செய்தவர்கள் என்றேன்.

தவறு செய்யாதவர்களை தவறு செய்யாதவர்கள் என்றேன்.


நியாயத்தை உரைத்தேன்

அநியாயத்தைக் கண்டித்தேன்


நல்லவைகளை சுட்டிக் காட்டினேன்

அல்லவைகளை விளக்கிக் காட்டினேன்


உண்மையை ஏற்றுக் கொள்ளச் சொன்னேன்

பொய்யை விலக்கச் சொன்னேன்


நல்லவர்களை கெட்டவர்களாக மாற்ற வேண்டாம் என்று சொன்னேன்

கெட்டவர்களை நல்லவர்களாக மாற்ற வேண்டாம் என்று சொன்னேன்


தேவையற்றவைகளை மாற்றுங்கள் என்றேன்

தேவையுள்ளவைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றேன்.


விதுரர் : துரியோதனன் பாஞ்சாலியை நடு சபையில் வைத்து அவமானப்படுத்தி இருக்கிறான் அதை சரி என்கிறாய்?


அஸ்வத்தாமன் : துரியோதனன் செய்தது தவறானது என்றால் நீங்கள் அனைவரும் எதிர்த்து இருக்க வேண்டியது தானே? 


செய்யாதே என்று தடுத்து இருக்க வேண்டியது தானே! 


விதுரர் :ஏன் நாங்கள் எதிர்த்தோமே! அக்கிரமத்தை எதிர்த்து பேசினோமே! அநியாயத்தை நிறுத்த சொன்னோமே!


அஸ்வத்தாமன் : அனைத்தையும் பேச்சோடு நிறுத்தி விட்டீர்கள். செயலில் என்ன செய்தீர்கள்


விதுரர் : எங்கள் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 


அஸ்வத்தாமன் : உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லாதீர்கள். துரியோதனன் வெற்றி பெற்று விட்டான், பாண்டவர்கள் தோற்று விட்டார்கள் துரியோதனனுக்கு பாண்டவர்கள் அடிமையாகி விட்டார்கள் 

நீங்கள் துரியோதனனிடம் தோற்ற பாண்டவர்களை விட்டு விடு என்று தான் சொல்ல முடியும். 


பணிவாகத் தான் கேட்க முடியும். கண்டிப்புடன் கேட்க முடியாது. துரியோதனனை உங்களால் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது.


ஏனென்றால், துரியோதனன் சட்டத்திற்கு உட்பட்டு தான் அனைத்தையும் செய்தான். அதனால் தான் துரியோதனனை உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  


பாண்டவர்களை விட்டு விடு என்று கெஞ்சிக் கொண்டிருந்தீர்கள். பாண்டவர்களுக்காக மன்றாடிக் கொண்டிருந்தீர்கள். 


பாண்டவர்களுக்காக சுயமரியாதையை விட்டு நடந்து கொண்டிருந்தீர்கள்.


  அர்ஜுனன் : உன்னுடைய வார்த்தைகள் எங்கள் அனைவரையும் அவமானப் படுத்துகிறது. அஸ்வத்தமா வார்த்தையை அளந்து பேசு பேசுவதற்கு நாக்கு இருக்காது.


அஸ்வத்தாமன் : அர்ஜுனா! இப்போது நீ ஒரு அடிமை. அடிமை நிலையை உணர்ந்து பேசு. அது தான் உனக்கு நல்லது.


விதுரர் : உலகில் மிகச்சிறந்த வீரர்களை இதை விட கேவலமாக யாராலும் செய்ய முடியாது.


அஸ்வத்தாமன் : துரியோதனன் செய்யவில்லை. அவர்கள் தோற்றார்கள் அடிமையானார்கள். இந்த கதி அடைந்தார்கள். இது அவர்களாகவே தேடிக் கொண்டது. துரியோதனனும் சரி, நாங்களும் சரி, யாரும் இந்த செயலை திட்டமிட்டு செய்யவில்லை. இதை பாண்டவர்களாகவே தேடிக் கொண்டது.


விதுரர் : பாஞ்சாலி நல்லவள், 

யாருக்கும் கெடுதல் செய்யாதவள், 

அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள், 

மற்றவர்களுக்காக வாழ்பவள், 

மற்றவர் நலம் ஒன்றே தன் நலம் என்று நினைப்பவள், 

மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவள், 

பத்தினி தெய்வம், 

பெண்களில் உயர்ந்தவள், 

பெண்களில் மாசு குறையாத மாணிக்கம், 

இந்த உலகம் முழுவதும்  தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம், 

அவளை போற்ற வேண்டும், அவமானப்படுத்தக் கூடாது


அத்தகைய சிறப்பு வாய்ந்த பாஞ்சாலிக்கு துரியோதனன் கெடுதலைச் செய்தான்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

[15:47, 5/5/2024] Balagangadharan: ஜபம்-பதிவு-970

ஜபம்-பதிவு-968 மரணமற்ற அஸ்வத்தாமன்-100 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-968

மரணமற்ற அஸ்வத்தாமன்-100

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


சாதாரண குடும்பமும், அரச குடும்பமும் இந்த சமுதாயத்தில் தானே இருக்கிறது. இன்று வேறு ஒரு வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு நாளை நம் அரச குடும்பத்திலும் நடக்கும் என்பதை அறியாமல் இருந்தீர்கள். இப்போது நடந்து விட்டது. சத்தம் போடுகிறீர்கள்

வீட்டை திருத்த முயற்சி செய்கிறீர்கள். 


நாட்டை திருத்தினால் வீடு திருந்தும் என்பது தெரியாமல் இருந்து இருக்கிறீர்கள்.

பாதிப்பு யாருக்கோ ஏற்படுகிறது என்று கண்டும் காணாதது போல் அமைதியாக இருந்தீர்கள். உங்களுக்கு ஏற்படும் போது சத்தம் போடுகிறீர்கள்

தவறை துரியோதனன் செய்யவில்லை. 


நீங்கள் அனைவரும் செய்து இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு இனிமேலாவது சமுதாயத்தை திருத்த முயற்சி செய்யுங்கள். சமுதாயத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். 


சமுதாயம் திருந்தவில்லையா, சமுதாயம் மாறவில்லையா சட்டம் கொண்டு வாருங்கள்.

இந்த செயல் தொடர்கதையாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் இதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுங்கள்


விதுரர் : நீ சொல்வது அவ்வளவு எளிதானது கிடையாது சமுதாயத்தில் காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறையை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. நீ சொன்னதை செய்தால் அரசாங்கத்திற்கே ஆபத்து ஏற்படும். 


ஆட்சிக்கே பாதிப்பு ஏற்படும். சமுதாயத்தில் குழப்பம் தான் மிஞ்சும்.


அஸ்வத்தாமன் : அப்படி என்றால் இங்கே நடப்பதை தவறு என்று சொல்லாமல், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல், வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்ளாமல், கோபப்படாமல், சத்தம் போடாமல், அமைதியாக இருங்கள் நடந்து கொண்டிருக்கும் செயலைப் பார்த்துக் கொண்டிருங்கள். 


வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

துரியோதனன் : அற்புதம், அபாரம் அஸ்வத்தாமா! உண்மையை அனைவருடைய மனதிலும் ஏறும்படி அடித்துக் கூறி இருக்கிறாய். உரக்கச் சொல்லி இருக்கிறாய். 


இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும்படி கூறியிருக்கிறாய். இனியும் இவர்கள் நான் செய்தது தவறு என்று சொல்வார்களேயானால், அவர்கள் பாண்டவர்கள் மேல் உள்ள அன்பினால் அவ்வாறு சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்பவன் தான் நண்பன் என்பதை நிரூபித்து விட்டாய் அஸ்வத்தாமா! நீ சொன்ன ஒவ்வொரு சொல்லும் இந்த சமுதாயத்திற்கு சொன்ன சொற்கள்.


 உண்மையைக் கொண்ட சொற்கள். என் மேல் உள்ள களங்கத்தை நீக்கும் சொற்கள். என்னை கெட்டவனாக நினைக்க வைக்க சில சதிகார்களின் வார்த்தைகளை பொய்யாக்கும் சொற்கள். நான் குற்றவாளி இல்லை நல்லவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தும் சொற்கள். நான் செய்த செயல் சரியானது தான் என்பதை நிரூபிக்கும் சொற்கள்.


இந்தத் துரியோதனன் கெட்டவன் இல்லை நல்லவன் என்பதை நிரூபிக்கும் சொற்கள். உலக நடைமுறைகளை பின்பற்றித் தான் இந்தச் செயல்களைச் செய்தான் இந்த துரியோதனன் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிக்கும் சொற்கள்.


நண்பா அஸ்வத்தாமா! என் மேல் உள்ள களங்கத்தை நீக்கி விட்டாய். என்மேல் சாட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டை நீக்கி விட்டாய். நான் நல்லவன் களங்கமில்லாதவன். நீதி நெறி தவறாதவன், சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவன், உலக நடைமுறைகளைத் தான் பிற்பற்றுபவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தி விட்டாய்.


துரியோதனன் செய்த செயல் தவறானது என்று 

நாளைய உலகம் சொல்லி விடக்கூடாது என்பதற்காகவும், 


இந்தத் துரியோதனன் செய்த செயல் சரியானது தான் என்று 

நாளைய உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 


யாரைக் கண்டும் பயப்படாமல், 

எதனைக் கண்டும் பயப்படாமல், 

அதிகாரவர்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல், 

பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், 

ஆதிக்கவர்க்கத்தைப் பற்றிக் கவலைப்டாமல், 

துரியோதனனுக்கு ஆதரவாகப் பேசினால் 

எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், 


உன்னைப் பற்றிக் கவலைப்படாமல், 

உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல், 


உன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், 

நீ பேசிய பேச்சுக்கள் ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் 

என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.


இந்த உலகம் உள்ளவரை, நட்புக்கு இலக்கணமாக உன்னுடைய பெயரே இருக்கும். அப்படி இல்லை என்றால் தேவைப்படுபவர்கள் தங்கள் சுயநலத்திற்காக வேறு ஒருவர் பெயரை நட்புக்கு இலக்கணமாக வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.


அஸ்வத்தாமன் : நீ என்னை உன்னுடைய உண்மையான நண்பனாக 

ஏற்றுக் கொண்டாயோ இல்லையோ எனக்குத் தெரியாது. 

ஆனால் நான் உன்னை என்னுடைய 

உண்மையான நண்பனாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். 

அதனால் பேசினேன். 


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////